இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையில் பௌத்த தத்துவம் மற்றும் கலாசார பரிமாற்றத்திற்காக பல வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக புத்த சாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.

மக்கள் சீனாவில் உள்ள வெள்ளைக்குதிரை ஆலய வளாகத்தில் இலங்கை பாரம்பரியத்தில் பௌத்த விகாரையை நிர்மாணிப்பது தொடர்பாகவும் சமய கலாசார ஒத்துழைப்பு தொடர்பாகவும் சீன தூதுக்குழுவினருடன் புத்தசாசன சமய கலாசார அலுவல்கள் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here