கனடாவை உலுக்கிய இலங்கையர்கள் படுகொலை!

0
7

கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், பிள்ளைகள் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அறிந்து தாம் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளதாகக் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். காவல் துறை தரப்பு உரிய விசாரணை முன்னெடுப்பதுடன், உண்மையான பின்னணியை வெளிக்கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இந்த படுகொலை சம்பவம் முதலில் துப்பாக்கிச் சூடு என அறிவிக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆயுதமொன்றால் கொலைகள் மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்களில் ஒட்டாவாவில் இவ்வாறான ஒரு கொலை இடம்பெற்றது இதுவே முதல் தடவை என அந்நகர மேயர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here