தரமற்ற தேங்காய் எண்ணெய் சந்தையில் விற்பனை

0
11

பண்டிகை காலத்தில் தரமற்ற தேங்காய் எண்ணெயை சந்தையில் விற்பனை செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற அமர்வின் போது விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறிய ஆலை உரிமையாளர்களால் உற்பத்தி செய்யப்பட்டு சந்தையில் தரமற்ற எண்ணெய் விற்பனை செய்யப்படுகின்றது.இவ்வாறு விற்பனை செய்யப்படும் தேங்காய் எண்ணெய்யின் தரம் தொடர்பில் பிரச்சினைகள் காணப்படுகின்றது.

உற்பத்திகளைத் தரப்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தைத் தயாரிக்கும் போது இது குறித்து நுகர்வோருக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here