பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை சலுகை விலையில் வழங்கும் வேலைத்திட்டத்தை அச்சகத் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது, வெகுஜன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார இதனை தெரிவித்தார்.
குறித்த பாடசாலை அதிபர்களின் தலையீட்டுடன், இதற்கான விண்ணப்பங்களை மேற்கொள்ள முடியும். என்றும் அவர் குறிப்பிட்டார்.