இந்திய நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த போது, பார்வையாளர் அரங்கில் இருந்து அத்துமீறி நுழைந்த 2 இளைஞர்களினால் பரபரப்பு ஏற்பட்டது.
மக்களவையில் பார்வையாளர் இடத்தில் இருந்து இருவர் திடீரென அமைச்சர்கள் அமர்ந்திருக்கும் இடத்திற்குள் குதித்தனர்.கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்.இதனால் அமைச்சர்கள் பதற்றம் அடைந்து ஓட ஆரம்பித்தனர்.
அதேவேளையில் நாடாளுமன்றத்திற்கு வெளியே ஆணொருவரும், பெண்ணொருவரும் புகை குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாடாளுமன்றத்திற்கு வெளியேயும் பதற்றமான நிலை ஏற்பட்டது.
அவர்களையும் கைது செய்த டெல்லி பொலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.