தற்போது பெய்து வரும் கடும் மழையுடன் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொக்மாதுவ இடமாறலில் வெளியேறி கனங்கே திசை நோக்கி செல்ல முடியாத அளவுக்கு வெள்ள நிலைமை இன்னும் காணப்படுவதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக கொழும்பில் இருந்து பயணிக்கும் வாகனங்கள் பாலட்டுவ இடமாறலிலும், மத்தள பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் கொடகம இடமாறலிலும் வெளியேறுமாறு அனைத்து சாரதிகளிடம் கோரப்பட்டுள்ளது