சட்விரோதமான கடலட்டை பிடியில் ஈடுப்பட்ட 07 பேர் கைது

0
5

சிலாவத்துறை கடற்பரப்பில் கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது சிலாவத்துறை கடல் பகுதியில் சட்டவிரோதமான முறையில் இரவு நீரில் மூழ்கி கடலட்டை பிடித்துக் கொண்டிருந்த நிலையில் 07 பேரை கடற்படையினரால் நேற்று புதன்கிழமை (13.12.2023) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது 02 படகுகளும், டைவிங் கருவிகள் மற்றும் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சுமார் 874 கடல் அட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்டவர்கள் மன்னாரைச் சேர்ந்த 22 வயதுக்கும் 48 வயதுக்கு இடைப்பட்டவர்கள் ஆவர். 07 பேரும் அவர்களின் உடைமைகள் மற்றும் கடல் அட்டைகள் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சிலாவத்துறை கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here