இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் முட்டையின் விலை குறைக்கப்படாவிட்டால், எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை முட்டை இறக்குமதி தொடரும் என வர்த்தக மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் வர்த்தக அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை, அரசாங்கத்திடம் சுமார் 06 மில்லியன் இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் கையிருப்பில் உள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், அவற்றை எதிர்வரும் காலங்களில் சந்தைக்கு வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.