அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய செயலி!

0
4

கடற்கரைகளில் கழிவு முகாமைத்துவத்திற்குப் பயன்படுத்தக்கூடிய கைபேசி செயலி (Beach Cleanup Coordination APP) அறிமுகம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

கடலோர மற்றும் கடல்சார் சூழலின் நிலையான வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை முறையாக ஒருங்கிணைத்து, கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலையீட்டுடன் இந்தக் கைபேசி செயலி அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here