தரம் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான தகவல் தொழில்நுட்ப பாடங்களுடன் செயற்கை நுண்ணறிவு (AI) கற்கைநெறி முன்னோடித் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று (19.03.2024) முதல் 20 பாடசாலைகளில் இந்த முன்னோடித் திட்டமானது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
தெரிவுசெய்யப்பட்ட 20 பாடசாலைகளில் 8 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட மாணவர்களுக்குத் தகவல் தொழில்நுட்ப பாடத்திட்டத்துடன் செயற்கை நுண்ணறிவு (AI) பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தும் முன்னோடி திட்டத்தையே கல்வி அமைச்சு இன்று ஆரம்பித்துள்ளது.