செல்லப்பிராணிகள் தொடர்பில் எச்சரிக்கை!

0
3

வெப்பநிலை உயர்வினால் வீட்டு செல்லப்பிராணிகள், தெரு நாய்கள் மட்டுமின்றி வனவிலங்குகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. வீடுகளில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு அதிக வெப்பம் காரணமாக வெப்ப பக்கவாதம் ஏற்படும் அபாயம் உள்ளதாக விலங்கு நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். செல்லப்பிராணிகளை ஒரு நாளைக்கு 2/3 முறை குளிப்பாட்டுவது நல்லது என்று கால்நடை மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும், அதிக வெப்பம் நிலவும் போது 20 நிமிடங்களுக்கு அதிகமாகப் பகல் நேரங்களில் செல்லப்பிராணிகளை வாகனத்தில் வைத்திருப்பது மிகவும் ஆபத்தானது எனவும் வெப்ப அதிர்ச்சியால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும், அவர்களுக்குத் தண்ணீர் மற்றும் உணவு வழங்குவது அத்தியாவசியம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் பாம்புகள் நுழையும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here