கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரையான இரவு நேர அஞ்சல் ரயில் சேவையை ரத்து செய்ய ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.
நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மண்சரிவு காரணமாக மலையகப் மார்க்கத்தில் ரயில் சேவையில் இடையூறு ஏற்பட்டுள்ளதை அடுத்து ரயில்வே திணைக்களம் இந்த முடிவை எடுத்துள்ளது.
மேலும், கெலிஓயாவிற்கும் கம்பளைக்கும் இடையிலும் தெமோதர மற்றும் ஹாலியால பகுதிக்கு இடையிலும் இரண்டு இடங்களில் தண்டவாளத்தில் மண்மேடுகள் சரிந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.