குழுவின் அங்கத்துவத்தில் இருந்து விலகல்!

0
3

கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவில் இருந்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவும் விலகியுள்ளார்.

குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டுள்ள ஒருவரின் தலைமையின் கீழ் தம்மால் பணியாற்ற முடியாது எனவும் அதனால் தாம் குறித்த குழுவிலிருந்து விலகுவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரத் தமது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்னவும் நேற்றைய தினம் கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவின் அங்கத்துவத்தில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here