சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவரான மஹேந்திர சிங் தோனி இன்னும் 10 நாட்களில் வலைப்பயிற்சியில் ஈடுபடவுள்ளதாக அணியின் நிர்வாக இயக்குனர் காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் IPL தொடருக்காக தோனி தற்போது தன்னை தயார்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் தொடர்ச்சியாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் காசி விஸ்வநாதன் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், சென்னை அணி வீரர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் பயிற்சிகளில் ஈடுபடுவார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.