மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா

0
7
மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை முன்னெடுத்து வரும் சாய்ந்தமருது பொலிஸார் மத்ரஸா மாணவனின் மரணம் தொடர்பில் சிசிடிவி கெமராவின் சேமிப்பகம் வன்பொருள் மாயமான விடயம் தொடர்பில்  கவனம் செலுத்தியுள்ளனர்.
மாணவனின் கழுத்து நெரிக்கப்பட்டதால்தான்  மரணம்  ஏற்பட்டுள்ளதாக அம்பாறை பொது வைத்தியசாலை மரண விசாரணை அதிகாரி சி.ரி.மகாநாடு நேற்று அறிவித்துள்ளார் இன நிலையில் மேற்படி விசாரணையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சிசிடிவி கெமராவின் சேமிப்பகம் வன்பொருள் மீட்கப்பட்டால் உண்மைகள் பல வெளியாகும் என பொலிஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
மேலும் குறித்த மத்ரஸா மாணவனின் மரணமானது கொலையா அல்லது தற்கொலையா என்ற சந்தேகத்துடன் விசாரணை தொடரப்படுகின்றது
அத்துடன் மாணவனின் மரண விசாரணைக்காக  சாய்ந்தமருது பொலிஸாரால் அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட   மதரஸா  நிர்வாகியாகிய மௌலவி கைது செய்யப்பட்டு மீண்டும்  பொலிஸ் நிலையம் ஒன்றின் தடுப்பு காவலில் பாதுகாப்பாகத் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here