போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் !

0
19

போதைப்பொருள் பாவனையாளர்களின் அதிகரிப்புக் காரணமாகச் சிறைச்சாலைகளில் தொற்று நோய்கள் பரவுவது அதிகரித்துள்ளதாகச் சிறைச்சாலை சேவை தெரிவித்துள்ளது. சிறைச்சாலை சுகாதாரச் சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ரணசிங்க, இது தொடர்பில் சிறைச்சாலை திணைக்களத்தின் சுகாதாரத் திணைக்களம் அதிகக் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவித்தார்.

போதைப்பொருளுக்கு அடிமையான கைதிகள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் தொற்று நோய்களுக்கு ஆளாக நேரிடும் என வைத்தியர் ஹேமந்த ரணசிங்க சுட்டிக்காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here