இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

0
6

மேஷம்

புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது கூடுதல் கவனம் தேவை. பிள்ளைகள் வழியில் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மாலையில் வாழ்க்கைத்துணையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். தந்தைவழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போலவே இருக்கும். சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். இன்று தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

ரிஷபம்

காலையில் சற்று சோர்வாக இருக்கும். பிற்பகலுக்கு மேல் உற்சாகமும் மகிழ்ச்சியும் ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் கூடுதல் லாபம் கிடைக்கும். பங்குதாரர்களால் ஆதாயம் கிடைக்கக்கூடும். விநாயகர் வழிபாடு நன்று.

மிதுனம்

மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட சிறுசிறு பிணக்குகள் மறைந்து, அந்நியோன்யம் அதிகரிக்கும். புதிய முயற்சிகளை பிற்பகலுக்குமேல் தொடங்குவது நல்லது. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் நல்லபடி ஒத்துழைப்பார்கள். அம்பிகை வழிபாடு நலம் சேர்க்கும்.

கடகம்

காலை முதலே சுறுசுறுப்பாகச் செயல்படுவீர்கள். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் தேவையான பணம் இருப்பதால் சமாளித்துவிடுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சி ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். அம்பிகையை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

சிம்மம்

காலையில் வழக்கமான பணிகளில் மட்டுமே ஈடுபடவும். புதிய முயற்சிகளைப் பிற்பகலுக்கு மேல் தொடங்குவது சாதகமாக முடியும். தாய்வழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வியாபாரத்தில் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். பணியாளர்களிடம் போதுமான ஒத்துழைப்பு கிடைக்காது. சிவபெருமானை வழிபடுவது நன்று.

கன்னி 

அதிர்ஷ்டகரமான நாள். சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சி வெற்றிகரமாக முடியும். உங்களுடைய முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பங்குதாரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். முருகப்பெருமானை வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

துலாம்

எதிர்பாராத செலவுகள் ஏற்படும். அதன் காரணமாக கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவேண்டிய நிர்ப்பந்தமும் ஏற்படும். வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பார்த்த காரியம் முடிவது மகிழ்ச்சி தரும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. பணிகளைக் குறித்த நேரத்தில் முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைப்பதற்குச் சற்று கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். ஆஞ்சநேயரை வழிபடுவது சிறப்பு.

விருச்சிகம்

தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். வியாபாரத்தில் பணியாளர்களால் பிரச்சினைகள் ஏற்படக்கூடும். பங்குதாரர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும். பைரவர் வழிபாடு பலன் தரும்.

தனுசு 

உற்சாகமான நாள். தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள்.  வீட்டில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே காணப்படும். பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற முயற்சி செய்வீர்கள். அம்பிகையை வழிபடுவது நன்று.

மகரம்

இன்று எதிலும் சற்று பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பிள்ளைகள் பிடிவாதம் பிடித்தாலும் அனுசரித்துச் செல்லவும். மாலையில் தாய்வழி உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் அவர்களிடம் கனிவாக நடந்துகொள்ளவும். விநாயகரை வழிபடுவது நலம் சேர்க்கும்.

கும்பம்

எதிலும் ஒருமுறைக்குப் பலமுறை சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். தந்தையின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள். திடீர் செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். முக்கிய முடிவுகளை ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து எடுப்பது நல்லது. வியாபாரத்தில் விற்பனை வழக்கம் போலவே இருக்கும். பணியாளர்களுக்காக செலவு செய்ய நேரிடும். இன்று மகாவிஷ்ணுவை வழிபடுவது சிறப்பானப் பலன்களைத் தரும்.

மீனம்

எதிர்பாராத பணவரவுடன், திடீர் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. மற்றவர்களுக்குக் கடனாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும். துர்கையை வழிபடுவது நன்று.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here