750 தோட்டாக்கள் அடங்கிய ஆறு பெட்டிகள் மீட்பு

0
5

முல்லைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாளைய மடம் பகுதியில் கிடந்த வு-56 ரக துப்பாக்கிகளுக்கான தலா 750 தோட்டாக்கள் அடங்கிய ஆறு பெட்டிகள் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வாளைய மடம் பகுதியைச் சேர்ந்த ஒருவர் பனை விதைகளை நடுவதற்காக நிலத்தில் தோண்டும் போது ​​இந்தப் பெட்டிகளைக் கண்டு கடற்படை முகாமுக்குத் தகவல் கொடுத்தார்.இந்த பெட்டிகள் திறக்கப்படாத புதிய தோட்டாக்களாக இருக்கலாம் எனவும் அதில் 4500 தோட்டாக்கள் இருப்பதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். நீதிமன்ற உத்தரவுக்கு அமைய இந்த பெட்டிகள் திறக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here