ஒன்லைன் மூலம் கடன் வழங்கும் சட்டவிரோத நிறுவனங்கள்.

0
7

ஒன்லைன் முறையின் கீழ் கடன் வழங்குவதற்காக 40க்கும் மேற்பட்ட சட்டவிரோத நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளதாக ஊழல் எதிர்ப்பு குரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களின் கடன் வட்டி வீதம் வருடாந்தம் 365 சதவீதம் எனவும் இலங்கை மத்திய வங்கி அல்லது பொலிஸ் மா அதிபர் இது தொடர்பில் கவனம் செலுத்தவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நேற்று நடத்திய அந்த அமைப்பு இது தொடர்பான தகவல்களை வெளியிட்டது.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் வசந்த சமரசிங்க மற்றும் அதன் பிரதிநிதிகள் மற்றும் இணையவழி கொள்ளையினால் பாதிக்கப்பட்ட பலர் கலந்துகொண்டனர்
இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் உட்பட நிதிச் சபை இவ்வாறான சட்டவிரோத நிறுவனங்களை இயங்க அனுமதித்ததுடன் அவர்கள் மௌனமாக இருந்து என்ன செய்கிறார்கள் என்று கேள்வி எழுப்பினர்.

இந்த நிதி கடத்தல் அமைப்புகளின் குண்டர்களின் அச்சுறுத்தல்கள் குறித்து பாதிக்கப்பட்டவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொலிஸ் மா அதிபர் மற்றும் பொலிஸ் நிலையங்களில் நேரடியாக முறைப்பாடு செய்த போதிலும் இதுவரையில் அது தொடர்பில் சட்டம் அமுல்படுத்தப்படவில்லை எனவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

சீனர்கள் கூட இந்த பணமோசடி நிறுவனங்களை அமைத்திருப்பதும் தெரியவந்துள்ளதென அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here