நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் நீண்ட காலமாக நெரிசல் நிலவி வரும் நிலையில் அதற்கு தீர்வாக விளக்கமறியலில் வைக்கப்படுவதற்கு மாற்றாக சந்தேகநபர்களை வீட்டுக்காவலில் வைப்பதற்கான விதிகளை வகுக்க நீதி அமைச்சர் முன்வைத்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சந்தேகநபர்கள் மற்றும் தடுப்புக்காவல் வழக்குகளில் கைதிகளை விளக்கமறியலில் வைப்பதற்கும், வீட்டுக்காவலில் வைப்பதற்கும் விதிகளை அறிமுகப்படுத்த, உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்று நியமிக்கப்பட உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here