43 பேருக்கு எதிராக சர்வதேச சிவப்பு எச்சரிக்கை!

0
4

பாதாளக் குழுக்களைச் சேர்ந்த 43 பேருக்கு எதிராகச் சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த காவல்துறை ஊடகப் பேச்சாளர், பாதாள குழுக்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் பலருக்கு எதிராகச் சர்வதேச சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட உள்ளன என காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here