எல்லா வருடமும் மார்ச் 8-ஆம் திகதி சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் உண்மையில் இந்த நாள் எதற்காக அனுசரிக்கப்படுகிறது என்ற காரணம் நம்மில் பலருக்கு தெரியாது. அது என்ன என்பதை இந்த பதிவின் மூலமாக பார்க்கலாம்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் திகதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது. பெண்கள் உரிமைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அடையாளம் கண்டு சம உரிமைக்கான அவர்களது போராட்டத்தை ஊக்குவிக்க கூடிய ஒரு நாளாக இது அமைகிறது.