தொடரும் இயற்கை அனர்த்தங்களினால் போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்கும் உயர்தரப் பரீட்சை பரீட்சார்த்திகளுக்குப் பரீட்சை திணைக்களம் விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது. பதுளையில் இருந்து பண்டாரவளைக்குப் பயணிக்கச் சிரமப்படும் சிரேஷ்ட பரீட்சை பரீட்சார்த்திகள் பதுளையில் உள்ள மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்ற முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, பண்டாரவளையில் இருந்து பதுளைக்குச் செல்வதில் சிரமம் உள்ள பரீட்சார்த்திகள் பண்டாரவளை மத்திய மகா வித்தியாலயத்தில் பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது