தமிழகத்தில் இருந்து இலங்கை கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற 25 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தமிழகத்தின் காரைக்கால் மற்றும் நாகப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
எல்லை தாண்டி மீன்பிடித்தமைக்காக 25 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களின் இரண்டு விசைப்படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.