அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் புதிய டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள் விநியோகிக்கப்படவுள்ளதாக ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த அட்டையில் கைவிரல் அடையாளம், குருதி வகை உள்ளிட்ட பல்வேறு தரவுகள் உள்ளடக்கப்பட்டிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விண்ணப்பதாரிகளுக்கு மாத்திரம் புதிய டிஜிட்டல் அட்டை வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக நாடு முழுவதும் இதனை அமுலாக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.