மகளிர் தொடர்பான தேசிய ஆணைக்குழுவை நியமிப்பது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய இந்த வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
பெண்களை பலப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக இந்த தேசிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படுவதாக குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.