வட்டுக்கோட்டை திருட்டு சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டு வட்டுக்கோட்டை பொலிஸாரினால் சித்திரவதைக்கு உள்ளானமை தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் .
இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
வட்டுக்கோட்டை திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு கைதி உயிரிழந்த நிலையில் இந்த வழக்கு இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது கைது செய்யப்பட்ட மற்றுமொரு சந்தேகநபரேஇன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இவ் வழக்குஇ வட்டுக்கோட்டைப் பொலிசாரிடமிருந்து மாற்றப்பட வேண்டும் என்று சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையும் நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
வழக்கில் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி சுகாஸ் உள்ளிட்ட பலரும் முன்னிலையாகியிருந்தனர்.