காசாவில் ஒரு குறுகிய கால போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலிய அரசாங்கமும்இ ஹமாஸ் போராளிகளும் ஒப்புக் கொண்டதாக கட்டார் )தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலின் போது பிடிபட்ட 50 பணயக்கைதிகளை விடுவிக்கவும்இ இஸ்ரேலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 150 பாலஸ்தீனிய கைதிகளை விடுவிக்கவும் இங்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளன.
போர்நிறுத்தம் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த போர் நிறுத்தம் குறைந்தது 4 நாட்களுக்கு நீடிக்கும் என்றும் முன்னணி மத்தியஸ்தரான கட்டார் சுட்டிக்காட்டியுள்ளது.மனிதாபிமான போர் இடைநிறுத்தம் காசாவில் உள்ள பொதுமக்களுக்கு மேலதிக உதவி மற்றும் எரிபொருளை அனுமதிக்கும் என்றும் கட்டார் கூறியுள்ளது.