சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை கடன் 12 ஆம் திகதிக்குள் கிடைக்க வாய்ப்புள்ளதாக வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்தார்.
வெளிவிவகார அமைச்சு, தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்களின் செலவின தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் இன்று இதனை தெரிவித்தார்.
புதிய சீர்திருத்தச் செயல்பாட்டில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால்தான் IMF முதல் தவணை கடனை மிக விரைவாகப் பெற முடிந்தது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.