பாரம்பரிய அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என மௌபிம ஜனதா கட்சியின் தலைவர், தொழிலதிபர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மௌபிம ஜனதா கட்சியின் கொழும்பு மாவட்ட மாநாடு இன்று (17) பிற்பகல் சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் அனுராதா யஹம்பத், இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் வீரசுமண வீரசிங்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசிறி விஜேநாயக்க, இராஜதந்திர அதிகாரி பாலித கொஹோன, சர்வதேச மோட்டார் பந்தயச் சம்பியனான டிலந்த மாலகமுவ, ஓட்ட பந்தயச் சம்பியனான ஷெஹான் அம்பேபிட்டிய உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.