பராமரிப்பு உதிரி பாகங்கள் இல்லாத காரணத்தினால் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான நான்கு விமானங்களைத் தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடந்த ஆண்டு மட்டும்இ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் இல்லாததால் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்துச் செய்ய வேண்டியிருந்தது. மேலும், இந்த நிலையே விமானத் தாமதத்திற்கு முக்கியக் காரணம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதற்கு முன்னர் 24 விமானங்களைக் கொண்டிருந்தது. தற்போது 18 விமானங்கள் மட்டுமே பறக்கும் மட்டத்தில் உள்ளன.