நாடாளுமன்றத்தில் பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் மற்றும் நிதிச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு விவாதத்துக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இதற்காக இன்று ஞாயிற்றுக்கிழமையும் நாடாளுமன்றம் கூடுகின்றது என்று நாடாளுமன்றம் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்ற அலுவல்கள் குழுவில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கமைய, குறித்த விவாதம் இன்று 9.30 முதல் மாலை 4.30 வரை நடைபெறவுள்ளது.