நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் மதிப்பீடு 45 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இரண்டாம் மதிப்பீட்டுக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
2024 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் கடந்த 13 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து 14 ஆம் திகதி முதல் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது.
இந்நிலையிலேயே இரண்டாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று இடம்பெற்றது.
இதேவேளை, நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம் திகதி புதன்கிழமை வரை ஞாயிறு தினங்கள் தவிர்த்து 19 நாட்கள் குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.
அதற்கமைய 2024 ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்ட மூன்றாம் மதிப்பீடு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் 13 ஆம் திகதி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.