நாடாளுமன்ற சேவைகள் இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்கள்

0
8

நாடாளுமன்ற உறுப்பினர்களான டயனா கமகே, சுஜித் சஞ்சய பெரேரா மற்றும் ரோஹன பண்டார ஆகியோரின் நாடாளுமன்ற சேவையை ஒரு மாத காலத்திற்கு இடைநிறுத்துவதற்கு நாடாளுமன்ற நெறிமுறைகள் மற்றும் சிறப்புரிமைகள் குழு தீர்மானித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நாடாளுமன்ற உறுப்பினர்களான ரோஹன பண்டார மற்றும் சுஜித் சஞ்சய பெரேரா ஆகியோருக்கு இடையில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி நாடாளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே சிறப்புரிமைகள் குழு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

குழுவின் தலைவர் இது தொடர்பான தீர்மானத்தை இன்று நாடாளுமன்றத்திற்கு அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here