இலங்கையின் எதிர்கால ஜனாதிபதி நானே என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின்(PUCSL) முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.
அண்மையில் வர்த்தமானி மூலம் தனது வேட்புமனுவை உத்தியோகபூர்வமாக அறிவித்தேன்.
இலங்கையின் பொருளாதாரம் மற்றும் வருமானத்தை மேம்படுத்துவதற்கான வழிகள் என்னிடம் உள்ளன.
நிச்சயம் நான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் என்று கூறியுள்ளார்.