கொழும்பில் பல இடங்களில் இன்று 16 மணித்தியால நீர் தடை அமுல்படுத்தப்படவுள்ளது. தேவையான பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. கொழும்பின் 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய மாவட்டங்களில் நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்று மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை நீர் தடை காலம் அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here