2024 ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞானப் பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. விவசாய விஞ்ஞானப் பாட பரீட்சைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானதையடுத்து அடுத்துப் பரீட்சை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இரத்துச் செய்யப்பட்ட பரீட்சை மீண்டும் நடத்தப்படும் திகதி குறித்துப் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.