புதுச்சேரி சோலைநகரை சேர்ந்த 9 வயது சிறுமியை கொலை செய்த வழக்கில் 19 வயதாகும் கருணாஸ் என்ற இளைஞரும் 60 வயதாகும் விவேகானந்தன் என்ற முதியவரும் கைது செய்யப்பட்டனர். கருணாஸ் விவேகானந்தன் ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதும், அதில் சிறுமி இறந்துபோனதும் தெரியவந்துள்ளது.
இன்று காலை முதல் புதுச்சேரியில் பல இடங்களில் தர்ணா போராட்டம், சாலை மறியல் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.