எதிர்வரும் நாட்களில் தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் போது வரி அடையாள இலக்கங்களை வழங்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்தும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதன்போது, தேசிய அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ளும் போது அனைவருக்கும் வரி அடையாள இலக்கம் வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரித்துறையின் தரவுகள் கணினிமயமாக்கப்பட்டு, வரி தொடர்பான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.