பல்கலைகழக மாணவர்களுக்கு விசேட அறிவிப்பு

0
9

களனிப் பல்கலைக்கழகத்தில் மூடப்பட்டுள்ள ஏனைய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகின்றன.
பல்கலைக்கழக மாணவர்கள் குழு ஒன்று பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவரை தாக்கிய சம்பவத்தினால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக களனி பல்கலைக்கழகத்தின் கல்வி நடவடிக்கைகள் கடந்த 5 ஆம் திகதி முதல் தற்காலிகமாக மூடப்பட்டது.

பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடம், கணினி மற்றும் தொழில்நுட்ப பீடம், வர்த்தக மற்றும் முகாமைத்துவ பீடம் ஆகியவற்றின் கல்வி நடவடிக்கைகள் கடந்த திங்கட்கிழமை ஆரம்பிக்கப்பட்டதுடன், ஏனைய இரண்டு பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பிக்கப்படுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here