படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை பலி- 8 பேர் மாயம்

0
6

இத்தாலியின் லம்பேடுசா தீவில் புலம்பெயர்ந்தோர் சென்ற படகு கவிழ்ந்ததில் 2 வயதுக் குழந்தை நீரில் மூழ்கிப் பலியாகியுள்ளது.
துனிசியாவின் துறைமுக நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து புலம்பெயர்ந்தோருடன் புறப்பட்ட, படகு லம்பேடுசா தீவில் திடீரென கவிழ்ந்துள்ளது.

கடலோர காவல்படை மற்றும் உள்ளூர் மீனவர்களால் 42 பேர் மீட்கப்பட்டிருப்பினும், 8 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. கடலோர காவல் படையினர் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
படகில் புர்கினா பாசோ, கினியா-பிசாவ் மற்றும் மாலி ஆகிய நாடுகளிலிருந்து குடியேறியவர்கள் பயணித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here