இன்றைய நாளுக்கான ராசி பலன்கள்

0
8

மேஷம்

மகிழ்ச்சி தரும் நாள். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தம் நீங்கி சுமுகமான உறவு ஏற்படும். பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும். தந்தை வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். முக்கிய முடிவு ஒன்றை துணிச்சலுடன் எடுப்பீர்கள். குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும். இன்று சிவபெருமான் வழிபாடு நன்று.

ரிஷபம்

அனுகூலமான நாள். சகோதரர்களால் சங்கடங்கள் ஏற்படக்கூடும். தந்தைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகி முடியும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணை வழி உறவுகளால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை. வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு சுமாராகத்தான் இருக்கும். அம்பிகை வழிபாடு நன்று.

மிதுனம்

உற்சாகமான நாள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனமாக இருக்கவும். பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள்.  வாழ்க்கைத்துணை அனுசரணையாக நடந்துகொள்வார். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரணையாக நடந்துகொள்ளவும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். குரு வழிபாடு நலம் சேர்க்கும்.

கடகம்

பொறுமையுடன் செயல்படவேண்டிய நாள். தாய்வழியில் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையுடன் அனுசரித்துச் செல்லவும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். தந்தையின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். பிள்ளைகளால் உறவினர்களிடம் உங்கள் மதிப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். மகாவிஷ்ணு வழிபாடு நலம் சேர்க்கும்.

சிம்மம் 

புதிய முயற்சி சாதகமாக முடியும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களுடைய பணிகளில் வாழ்க்கைத்துணையின் ஆலோசனை பயனுள்ளதாக இருக்கும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அதிகரிக்கும் செலவுகளால் சிலர் கடன் வாங்கவும் நேரிடும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவான அணுகுமுறை அவசியம். தட்சிணாமூர்த்தி வழிபாடு நன்று.

கன்னி 

பல வகைகளிலும் அனுகூலமான நாளாக இருக்கும். பணப்புழக்கம் அதிகரிக்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். கொடுத்த கடன் திரும்பக் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உறவினர்களாலும் நண்பர்களாலும் ஆதாயம் கிடைக்கும். சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும். விநாயகர் வழிபாடு தடைகளை அகற்றும்.

துலாம்

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். முக்கிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். சகோதரர்கள் பணம் கேட்டு நச்சரிப்பார்கள். தந்தையுடன் ஏற்பட்ட மனவருத்தம் நீங்கி சுமுக உறவு ஏற்படும். தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அரசாங்கக் காரியம் அனுகூலமாகும். செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே நடைபெறும். அம்பிகை வழிபாடு நன்று.

விருச்சிகம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவை. குடும்பப் பொறுப்புகளின் காரணமாக அலைச்சல் ஏற்படக்கூடும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. முக்கிய முடிவு எதுவும் இன்றைக்கு எடுக்கவேண்டாம். வியாபாரத்தில் சக வியாபாரிகளுடன் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம். இன்று நீங்கள் காலபைரவரை வழிபடுவது நன்று.

தனுசு 

சிந்தித்துச் செயல்படவேண்டிய நாள். கணவன் – மனைவிக்கிடையே கருத்துவேறுபாடு ஏற்படக்கூடும். நண்பர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். வாழ்க்கைத் துணைவழியில் எதிர்பார்த்த காரியம் இழுபறியாகும். புதிய முயற்சிகள் மேற்கொள்வதைத் தவிர்க்கவும். வாகனத்தில் செல்லும்போது கூடுதல் எச்சரிக்கை தேவை. வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். பணியாளர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும். முருகப் பெருமானை வழிபடுவது நன்று.

மகரம்

மகிழ்ச்சி தரும் நாள். கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருக்கும் பிணக்குகள் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் உங்கள் முயற்சிகளுக்குத் தேவையான ஆதரவு கிடைப்பதில் பிரச்சினை எதுவும் இருக்காது. நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் விஷயத்தில் சற்று சிரமமான சூழ்நிலையே காணப்படுகிறது. இன்று நீங்கள் முருகப்பெருமானை வழிபட நன்மைகள் உண்டாகும்.

கும்பம்

நீண்டநாள்களாக எதிர்பார்த்து ஏமாந்த பணம் இன்று கைக்கு வந்து மகிழ்ச்சி தரும். சிலருக்கு தந்தைவழி உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். சகோதரர் மூலம் ஆதாயம் கிடைக்கும். சுபச்செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களால் சில பிரச்சினைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தைப் பொறுத்தவரை பிரச்சினை எதுவும் ஏற்படுவதற்கில்லை. தட்சிணாமூர்த்தியை வழிபடுவது நன்று.

மீனம்

இன்று எதிலும் பொறுமை அவசியம். புதிய முயற்சிகள் இழுபறியாகும். அடிக்கடி மனதில் சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகளின் தேவையை நிறைவேற்ற சிறிது அலைய வேண்டியிருக்கும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மனவருத்தம் தரும். வீட்டில் பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் சற்று சோர்வு உண்டாகும். குடும்பப் பெரியவர்களை அனுசரித்துச் செல்லவும். வியாபாரத்தில் பணியாளர்கள் முரண்டு பிடிப்பார்கள். விட்டுக் கொடுத்துச் செல்லவும். ஆஞ்சநேயர் வழிபாடு நலம் சேர்க்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here