மஹியங்கனை – பொலன்னறுவை வீதியில், அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று (13.12.2023 ) பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.குழந்தையின் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் சடலத்தை மீட்டுள்ளனர் . அத்தோடு சடலத்திற்கு அருகில் ஒரு கறுப்பு துப்பட்டாவும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில், விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் என சந்தேகிக்கப்படும் தாகவும், பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here