உயர்தரப் பரீட்சை நாளை (04) ஆரம்பமாகி எதிர்வரும் 31ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. அத்துடன், க.பொ.த உயர்தரப் பரீட்சை 2,300 நிலையங்களில் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக உயர்தரப் பரீட்சையை இடையூறு இன்றி நடத்துவதற்கு பரீட்சை திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் இணைந்து வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளது. இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (02.01.2024) அனர்த்த முகாமைத்துவ நிலையத்தில் இடம்பெற்றது.
இதன்படி, அதற்கான விசேட ஒருங்கிணைப்பு பொறிமுறை மற்றும் சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் வேலைத்திட்டமொன்றை வகுத்துள்ளது.