வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவருக்குக் கோவிட் தொற்று இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அனுராதபுரம், பதவியா பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதான குறித்த நபர் சிறுநீரகநோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். குறித்த நபர் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் (02.01.2024) இரவு உயிரிழந்துள்ளார். வவுனியாவில் ஒரு வருடங்களிற்குப் பின்னர் மீண்டும் ஒருவர் கோவிட் தொற்றால் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.