சமூக சேவை திணைக்களத்தினால் 65 மாநகரசபைகள் மற்றும் நகர சபைகளை மையப்படுத்தி மேற்கொல்லப்பட்ட ஆய்வின் மூலம் இலங்கையில் யாசகர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆய்வில் சுமார் 3700 யாசகர்கள் பற்றிய தகவல்கள் பதிவாகியுள்ளன.
மேல் மாகாணத்தில் மட்டும் 1600 யாசகர்கள் இருப்பதாக சமூக சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகரிற்கு அண்மையில் சுமார் ஆயிரம் யாசகர்கள் வருகை தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.