இந்திய சுகாதார அமைச்சகம் வௌியிட்ட தரவுகளின் படி இந்தியாவில் நேற்று (18.12.2023) மாத்திரம் புதிதாக 339 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகின்றமையால் தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 1,701 ஆக அதிகரித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவின் கேரள மாநிலத்தில் புதிய வகையான கொரோனா வைரஸ் திரிபு பரவி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வைரஸ் தொற்று சிங்கப்பூரிலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.கொரோனா தொற்றின் பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் இந்தியா மட்டுமன்றி உலகம் முழுவதும் முகக்கவசம் அணியவேண்டியது கட்டாயமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here