கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளைச் சிசிடிவி கமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று (22ஆம் திகதி) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதன்படி இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கொழும்பில் இந்தத் திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் மூலம் போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்