இடியுடன் கூடிய மழை பெய்யும்.

0
30

மேற்கு-மத்திய வங்காள விரிகுடாவில் “மிச்சாங்” (“மிக்ஜாம்” என உச்சரிக்கப்படுகிறது) புயல் இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையைக் கடந்தது மற்றும் இந்த அமைப்பு படிப்படியாக வலுவிழந்து வருகிறது.மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில், குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும்.சப்ரகமுவ, மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படலாம்.இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here