மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த ஆசிரியரை, காலணி மற்றும் கற்களால் மாணவர்கள் விரட்டி அடித்த சம்பவம் சத்தீஸ்கர் மாநிலத்தில் நடந்துள்ளது. பஸ்தர் மாவட்டத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இந்த நிலையில், மீண்டும் மதுபோதையில் பள்ளிக்கு வந்த ஆசிரியரை, பாடம் நடத்துமாறு மாணவர்கள் கேட்டுள்ளனர். அப்போது, ஆசிரியர் திட்டியதால், ஆத்திரமடைந்த மாணவர்கள் அவரை பள்ளியில் இருந்து விரட்டி அடித்தனர்
மேற்கண்ட இச் சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது